Thursday, October 8, 2009

மழை நாளில்

அன்று

ஒரு மழை நாளில்
ஊரிலிருந்து அப்பா கொண்டுவந்திருந்த
புது சட்டை செருப்பையும் அணிந்துகொண்டு
மழையில் தெருவில் இறங்கி
சறுக்கி விழுந்தேன்

இன்று

ஒரு மழை நாளில்
சறுக்கி விழுந்தேன்
என் பால்யத்தில்

No comments: