Thursday, October 15, 2009

தமிழன்


பல மொழிகள் தெரிந்தும் பயனில்லை
தடுமாறிக்கொன்டிருக்கிறேன் (றோம்)
தூய  தமிழில் பேச

இயற்கையின் கவிதை


Thursday, October 8, 2009

மழை நாளில்

அன்று

ஒரு மழை நாளில்
ஊரிலிருந்து அப்பா கொண்டுவந்திருந்த
புது சட்டை செருப்பையும் அணிந்துகொண்டு
மழையில் தெருவில் இறங்கி
சறுக்கி விழுந்தேன்

இன்று

ஒரு மழை நாளில்
சறுக்கி விழுந்தேன்
என் பால்யத்தில்

Friday, August 28, 2009

................

காலையில்

ஜன்னல் திறக்கையில் குருவியுடனும்

அலுவலகத்தில் தோழர்களுடனும்

ஒய்வு நாட்களில் நண்பர்களுடனும்

எல்லா நாட்களும் நன்றாகத்தான் இருக்கிறது

மாலை வீடு திரும்புகையில்

கனத்த மௌனத்துடன் காத்திருக்கிறது

என்னை வரவேற்க- என்

தனிமை.........

Thursday, August 27, 2009

கட்டணம்


 வாரம் ஒரு முறை
தொலைபேசி அழைப்பு
மணிக்கணக்கில் அல்ல
நிமிடக்கணக்கில் தான்
போதும் என்று துண்டிக்கிறார்கள்
காலம் கருதி அல்ல
கட்டணம் கருதி
அவர்களுக்கு என்ன தெரியும்-என்
தனிமையின் வலி என்னவென்று...................

Friday, August 21, 2009

ஒரு மழை நாளில்





சட்டென பெய்த மழையில்


பட்டென ஒதுங்கி நின்றேன்


நான் நனையாமல்


மனதை நனையவிட்டு-என்


கடந்த கால நினைவுகளில்

Friday, August 14, 2009

தனிமை


நீ


இல்லாத நான்


நிலவில்லாத இரவு